Sunday 28th of April 2024 01:20:21 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி காணாமல் போன அமெரிக்க கடற்படை மாலுமிகள் ஐவரும் பலி!

ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி காணாமல் போன அமெரிக்க கடற்படை மாலுமிகள் ஐவரும் பலி!


அமெரிக்காவில் சன் டியாகோ அருகே கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி காணாமால் போன கடற்படையைச் சேர்ந்த 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கன் கப்பலுக்குச் சொந்தமான MH-60S என்ற ஹெலிகப்டர் கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் பசிபிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 5 மாலுமிகள் காணாமல் போயினர். இந்நிலையில் காணாமல் போன 5 மாலுமிகளும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

72 மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போன் மாலுமிகளைத் மீட்புப் பணியாளர்கள் தேடியபோதும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE